அடுத்த 3 மாதங்கள் அதிக கவனம் தேவை – சுகாதார செயலர் எச்சரிக்கை!
நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், அடுத்து வர இருக்கும் 3 மாதங்கள் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார செயலர் எச்சரித்துள்ளார்.
அதிக கவனம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி, 22,431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும், அடுத்து வர உள்ள பண்டிகை நாட்களில் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சின் இணைச் செயலர் லவ் அகர்வால் புதிய எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளார்.
அக்.15முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய விசா – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!
அதில், கோவிட்க்கு எதிரான நமது சவால் இன்னும் முடிவடையவில்லை. தற்போது 2ம் அலையை கட்டுப்படுத்தியுள்ளோம். தற்போது நாட்டின் 28 மாவடகிகளில் 5% முதல் 10% வரை நேர்மறை விகிதம் உள்ளது. மேலும், 34 மாவட்டங்களில் வாராந்திர பாதிப்பு 10% க்கும் அதிகமாக உள்ளது. லட்சத்தீவு, சண்டிகர், கோவா, இமாச்சலப் பிரதேசம், அந்தமான் & நிக்கோபார் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் 100% மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். நாட்டின் தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும், அக்டோபர்,நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து தமன்னா நீக்கம்? ரசிகர்கள் அதிர்ச்சி!
மக்கள் விழாக்களில் கலந்து கொள்ளும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று முதல் நவராத்திரி பண்டிகை தொடங்கப்பட்டுள்ளது. துர்கா பூஜை, மற்றும் ராம் லீலா போன்ற விழாக்களில் மக்கள் ஆன்லைனில் கலந்து கொள்ள வேண்டும். தீபாவளி அன்று உங்கள் சொந்தங்களை ஆன்லைன் மூலம் சந்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசிஸ் செலுத்திக் கொண்டு கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இதனால் 3ம் அலை கொரோனா பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளார்.