அக்.15முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய விசா – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து வரும் 15ம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய விசா அளிக்க இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய விசா:
உலகம் முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு தொடங்கியது. தொற்று மிகவும் அதிவேகத்தில் மக்களிடம் பரவிவிடும் தன்மை கொண்டுள்ளதால் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் உலக நடுகல் அனைத்தும் மற்ற நாட்டு பயணியர்களை அனுமதிக்க தடை விதித்தது. அதேபோல்,இந்திய அரசும் மற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. முதல் தொற்றின் பாதிப்பு குறைந்த, சில மாதங்களிலேயே மீண்டும் கொரோனா 2ம் அலை பரவல் தொடங்கியது.
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து தமன்னா நீக்கம்? ரசிகர்கள் அதிர்ச்சி!
இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமலில் இருந்தது. இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. .மேலும், சுற்றுலா பயணிகளுக்கான அனைத்து விசாக்களும் ரத்து செய்யபப்ட்டது. தொடர்ந்து பல மாதங்களாக சுற்றுலா தடை செய்யப்பட்டுள்ளதால் நாட்டின் சுற்றுலா துறை மிகவும் பாதிப்படைந்தது. இந்நிலையில், தொற்றின் பாதிப்புகள் குறைந்து மீண்டும் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் பல மாநில அரசுகளும் மீண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தது.
IPL 2021: KKR vs RR – டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! பவுலிங் தேர்வு!!
இது தொடர்பாக, விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், மத்திய குடும்ப நலத் துறை, சுற்றுலாத் துறை, வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது. அதன்பின்னர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாடுகளிலிருந்து தனி விமானங்களில் இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அக்.15 முதல் புதிய விசா வழங்கப்படும். அடுத்தகட்டமாக, நவம்பர் 15ம் தேதி முதல் பிற விமானங்களிலிருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய விசா அனுமதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.