தமிழகத்தில் 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்திவிட்டோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்திவிட்டோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
தமிழகத்தில் 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்திவிட்டோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
தமிழகத்தில் 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்திவிட்டோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

தமிழகத்தில் இதுவரை 5கோடிக்கும் அதிகமான கொரானா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகள்:

தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசிகள் தீவிரமாக செலுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது மேலும், குறைந்து 1400 க்கும் கீழ் உள்ளது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களை பேசியுள்ளார். அப்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசிகள் பற்றிய விவரகளை தெரிவித்தார். மேலும், தமிழக எல்லைகளில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு செய்யவில்லை.

IPL 2021 – KKR vs RR: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

தமிழகத்தில் வாரம் தோறும் நடத்தப்படும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 5 கோடி ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 23 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா முதல் தவணை தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்பட்ட மாவட்டமாக நீலகிரி உள்ளது. இன்று ஒரே நாளில் தமிழ்நாட்டிற்கு 17 லட்சம் தடுப்பூசி மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. கூடுதலாக, 50 லட்சத்து 12 ஆயிரத்து தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.

தமிழகத்தில் 1,400 க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் 1,390 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

மாநிலத்தில் இதுவரை 64% மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 22% நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தேவையான அளவு கோவாக்சின் தடுப்பூசிகள் தற்போது அரசிடம் உள்ளது. இதனால் இரண்டாம் தவணை செலுத்த வேண்டியவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அக்டோபர் 10ம் தேதியான ஞாயிறு கிழமை 5 வது மெகா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது. மேலும், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்கு – ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

தமிழகம் முழுவதும் சராசரியாக 70% நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது, விருதுநகர் மாவட்டத்தில் 88 %, தென்காசி 83 %, சென்னை 82%, மதுரை 79%, தேனி 77% நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் 70% மேலாக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. கரூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 60% குறைவாக உள்ளது என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!