1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 15 முதல் பள்ளிகள் திறப்பு!
தற்போது கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பள்ளிகள் திறப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான தகவலின் படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி ஜூன் 15 முதல் மீண்டும் திறக்கப்படும். ஆனால் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் நீண்ட கோடை விடுமுறைக்கு பிறகு இந்த மாதத்தில் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையில் மாநிலம் முழுவதும் சில புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மாநில பள்ளிக்கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் இந்த நிலைமையை கவனத்தில் எடுப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் ஊடகங்களிடம் பேசுகையில், ‘நாங்கள் கொரோனா நிலைமையை தொடர்ச்சியாக கவனித்து வருகிறோம்.
TNPSC தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் – ஒதுக்கீட்டில் முறைகேடு!
ஆனால் கொரோனா பொருத்தமான நடவடிக்கைகளுடன் ஜூன் 15 அன்று பள்ளிகளைத் துவங்குவோம். முகக்கவசங்களை அணிவது கட்டாயமில்லை. பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும். மேலும் இது குறித்த முடிவு சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வழக்குகள் உயர்வை கண்டு வருகின்றன. அந்த வகையில் மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 800 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.