பள்ளிகள் காலை 7 மணி முதல் 12 மணிவரை மட்டுமே திறப்பு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
கடந்த ஒரு சில வாரங்களாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்திருப்பதால் போபால் மாவட்டத்தில் பள்ளிகள் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை வெயிலை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் வழக்கத்தை விட மார்ச் மாதத்திலேயே வெப்பநிலை இயல்பை விட அதிகரித்திருக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு ஆந்திரா, தெலுங்கா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வகுப்புகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீப காலமாக மத்தியப் பிரதேச மாநிலம் முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை மாற்றம்? ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை!
மேலும் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெப்ப அலையின் கீழ் தத்தளித்து வருகின்றன. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இப்போது, அதிகரித்து வரும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரங்களை மாற்றியமைத்து மாவட்ட ஆட்சியர் அவினாஷ் லாவானியா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவின்படி, வெப்ப நிலை உயர்வால் மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறதை கவனத்தில் கொண்டு போபாலில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று (ஏப்ரல்.6) முதல் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், போபால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் தேர்வுகள் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.