தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை மாற்றம்? ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணையை மறுபரிசீலனை செய்ய பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் அரசை வலியுறுத்தியுள்ளார்.
மறுபரிசீலனை:
தமிழகத்தில் கடந்த 2020, 2021 ம் ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொற்று அச்சத்தாலும் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணத்தினாலும் 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதலுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டது. மேலும் கடந்த மாதம் பாடவாரியாக தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – RCB அணியில் இணையும் ஹேசில்வுட்!
மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ஆம் தேதி தொடங்கி மே மாதம் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நேற்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகான வழிமுறைகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் வெப்பக்காற்று அதிகம் வீசுவதால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அட்டவணையை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
10ம் வகுப்புகளுக்கு மே 6 -தமிழ், 14 – விருப்ப மொழி, 18 – ஆங்கிலம், 21 – தொழிற்கல்வி, 24 – கணிதம், 26 அறிவியல்,30- சமூக அறிவியல் தேர்வுகள் என கால அட்டவணை வெளியிடப்பட்டது. தமிழ், ஆங்கில தேர்வுகளுக்கு இடையில் ஏழு நாட்கள் உள்ளன. பிறகு மற்ற பாடங்களுக்கு 3, 2 நாட்கள் இடைவெளி உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 10ம் வகுப்புத் தேர்வுகளை ஏப்ரல் 27ம் தேதி தொடங்கி மே 8ம் தேதிக்குள் முடிக்கும் வகையில் கால அட்டவணை வெளியிட வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.