தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் மூடல் – தனியார் கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் முழுவதும் இருக்கும் அனைத்து தனியார் பள்ளிகளும் அடுத்ததாக வரவுள்ள ஜூன் மாதத்தில் ஒரு வாரம் முழுவதும் மூடி போராட்டம் நடைபெற இருப்பதாக தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்து உள்ளது.
தனியார் பள்ளிகள்:
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலமாகவே தங்களது வகுப்புகளை நடத்தி வந்தது. மேலும் மாணவர்களும் நேரடி வகுப்புகளுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலமாகவே பாடங்களை கவனித்து வந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப் பட்டு நேரடி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. மேலும் 10, 11,12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் இருந்து கூறப்பட்டு இருந்தது. மேலும் தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
BPNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.35,000/- ஊதியம்..!
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளை தவிர நிறைய தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் 25 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆரம்ப அனுமதியை பெறவில்லை. மேலும், 390 நர்சரி, பிரைமரி பள்ளிகள் தொடக்க அனுமதி பெறவில்லை. இந்த நிலையில் இந்த பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டதால் 75 சதவீத கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும் என்று தமிழக அரசு கூறி இருந்தது.
ExamsDaily Mobile App Download
அதனை தொடர்ந்து, தற்போது சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் பெறப்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கையாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் சார்பில் ஜூன் மாதத்தில் ஒரு வாரம் போராட்டம் நடைபெற உள்ளதாக தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் பங்கேற்கும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.