ஏப்ரல் 10 முதல் மே 15ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை முடிவு!
கர்நாடகாவில் 2021 -2022ம் கல்வியாண்டு வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அம்மாநிலத்தில் உள்ள தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கோடை விடுமுறை:
இந்தியாவில் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் மாணவர்களை தொற்றிலிருந்து காக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தினசரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்று வந்தது. இந்த நேரத்தில் அரசு நோய் தடுப்பு நடவடிக்கைளில் தீவிரம் காட்டி கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது. அதனால் மீண்டும் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வி துறை முடிவு செய்தது. பள்ளிகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் முடிந்த ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் 20% சம்பள உயர்வு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
அதனால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு 10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதில் பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து கர்நாடகாவிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 – 8 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு 2022 மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை ஆண்டு தேர்வு நடத்தப்படும் அதனை தொடர்ந்து ஏப்ரல் 9ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் தலையிட மறுக்கும் அமெரிக்கா – சொத்துக்களை முடக்குவதாக பைடன் அறிவிப்பு!
மேலும் 9-12 வரையிலான வகுப்புகளுக்கு மார்ச் 21 முதல் மார்ச் 26 வரை தேர்வு ஆண்ட்டி பொதுத்தேர்வு நடத்தப்படும். இதன் முடிவுகள் ஏப்ரல் 7ம் தேதி வெளியிடப்படும் என கர்நாடக கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு முடிந்த பிறகு ஏப்ரல் 10 முதல் மே 15 வரை கோடை விடுமுறை அளிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகளில் வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. இதனால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய இந்தாண்டு முன்கூட்டியே பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.