உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் தலையிட மறுக்கும் அமெரிக்கா – சொத்துக்களை முடக்குவதாக பைடன் அறிவிப்பு!
தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே நிலவி வரும் போரில் அமெரிக்கா தலையிட விரும்பவில்லை என்றும் அமெரிக்காவில் உள்ள அனைத்து ரஷ்ய சொத்துக்களும் முடக்கப்படுவதாகவும் அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
உக்ரைன் விவகாரம்
ஒரே நாளில் உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்களின் கவனம் ஈர்த்துள்ள உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் மனித குலத்திற்கே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா தனது போர்படைகளின் பலத்தை வைத்து அண்டை நாடான உக்ரைனை ஆட்கொள்ள முயற்சித்து வரும் வேளையில், இது 3ம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்போது உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, இந்த விவகாரத்தில் எந்தவொரு நாடும் தலையிட முனைந்தால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த போரில் ரஷ்யா, அமெரிக்காவின் தலையீட்டை எதிர்பார்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல முடியும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைனுக்கு எதிராக இராணுவ குற்றம் புரிந்ததாக அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும், இதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பல மாதங்களாக தயாராகி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள அனைத்து ரஷ்ய சொத்துக்களும் முடக்கப்படும் என்று அறிவித்த பைடன் உலக பொருளாதாரத்தில் டாலர், யூரோ, பவுண்ட்டுகளில் மேற்கொள்ளப்படும் ரஷ்யாவின் வணிகத்தை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ரஷ்யாவுக்கு சொந்தமான 4 முக்கிய வங்கி நிறுவனங்களை முடக்கிய அமெரிக்கா போர் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விருப்பம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். என்றாலும் நேட்டோ அமைப்பில் உள்ள ஒவ்வொரு பிரதேசத்தையும் அமெரிக்காவின் முழு படைபலத்துடன் பாதுகாக்கும் என்றும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரில் தலையிட விருப்பம் இல்லையென்றும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.