பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
இலங்கையில் G. C. E. உயர்தரப் பரீட்சை வரும் பிப்ரவரி 7ம் தேதி தொடங்க உள்ளதால் அன்று முதல் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக இலங்கை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மீண்டும் பள்ளி விடுமுறை:
கொரோனா நோய் தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பேரிழப்பை ஏற்படுத்தி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு ஆன்லைன் முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. ஒரு சில நாட்டில் மட்டும் கொரோனா பரவல் பாதிப்பு குறைய தொடங்கிய பின்னர், முதல் கட்டமாக உயர் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவு இடைவேளை – பெற்றோர்கள் சரமாரி புகார்!
இதேபோல், இலங்கையிலும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதன்பின்னர், சமீபத்தில் தான் மீண்டும் கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையில் பிப்ரவரி 7ம் தேதி அன்று 2022ம் கல்வியாண்டிற்கான G. C. E. உயர்தரப் பரீட்சை தொடங்க உள்ளது. இதனால் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களை மூடுவதற்கு இலங்கையின் கல்வி அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு? AICPI கணக்கீட்டு விவரங்கள் இதோ!
இரண்டாம் பருவத்திற்கான கல்வி நிலையங்கள் மீண்டும் மார்ச் 7ம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. GCE என்பது இலங்கையில் கல்விக்கான பொதுச் சான்றிதழ் தகுதித் தேர்வாகும். தேர்வின் தகுதியானது இலங்கை அரச பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேவையாகவும் உள்ளது. இந்த தேர்வுகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.