‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் காஃபிக்காக சண்டை போடும் வனிதா – கலாய்க்கும் நெட்டிசன்கள்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 3ல் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் தற்போது அல்டிமேட் ஷோவில் பங்கேற்று வரும் நிலையில், வழக்கம் போல சிறிய விஷயத்திற்காக இவர் போடும் சண்டைகளால் நிகழ்ச்சி மொத்தமும் கலவரமாகி இருக்கிறது.
பிக் பாஸ் வனிதா
தற்போது 24 மணிநேரமும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகி கொண்டிருக்கும் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சி ரசிகர்களின் ஒரே பொழுதுபோக்காக மாறி இருக்கிறது. பொதுவாக தினசரி 1 முதல் ஒன்றரை மணிநேரம் வரையும் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பார்ப்பதற்கே ரசிகர்கள் தங்களது வேலைகளை ஒதுக்கிவைத்து விட்டு டிவி முன்னால் காத்திருப்பது வழக்கம். ஆனால் இப்போது, ஒரு நாளைக்கு 24 மணிநேரமும் இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோ ஒளிபரப்பாகி கொண்டிருப்பதால் இது எக்கச்சக்கமான பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது.
‘பாக்கியலட்சுமி’ எழில் – அமிர்தா காதலுக்கு வில்லனாக அறிமுகமாகும் நடிகர் சாம்? ரசிகர்கள் ஷாக்!
இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய பல்வேறு முன்னாள் போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருவதால் ஆரம்பம் முதலே பிக் பாஸ் வீடு ரணகளமாகி இருக்கிறது. குறிப்பாக, ‘பிக் பாஸ்’ சீசன் 3ல் கலந்து கொண்ட போட்டியாளர் வனிதா விஜயகுமார், முதல் நாள் நடைபெற டாஸ்கில் இருந்து பாதியிலேயே விலகுவதாக அறிவித்தார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சற்றே கடுப்பாக ஆரம்பித்தனர். இதோடு நில்லாமல் பிரஸ் மீட் டாஸ்கில் தேவையில்லாத கேள்விகளை கேட்டு, சினேகன், அனிதா, சுரேஷ் என பலரது வெறுப்பையும் சம்பாதித்திருக்கிறார் வனிதா.
ஆனால் வனிதாவின் செய்கைகளை கண்டித்து அவ்வப்போது அபிராமி மற்றும் பாலாஜி முருகதாஸ் இருவரும் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தனக்கு காஃபி வேண்டும் என்று அடம் பிடித்து வந்த வனிதா ஒருவரையும் டீ குடிக்க விட மாட்டேன் என்று சொல்லி டீ தூளை எடுத்து ஒளித்து வைத்து விட்டார். இந்த சம்பவம் மீண்டும் ‘பிக் பாஸ்’ போட்டியாளர்கள் இடையே சலசலப்பை உருவாக்கி இருக்கிறது. தவிர, எல்லாருக்கும் பொதுவாக டீ தூள் கொடுத்த பிக் பாஸ் தனக்கு காஃபி கொடுக்கவில்லை என்று கூறி, ஷோவை விட்டு போக விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் கேப்டன் கூல் MS தோனி – கிராபிக் நாவல்! ரசிகர்கள் உற்சாகம்!
அதே சமயத்தில் கைவசம் இருக்கும் படங்களை விட்டுவிட்டு ‘பிக் பாஸ்’ அல்டிமேட்டில் கடைசி வரை கலந்து கொள்ள வேண்டும் என்று வந்தால், தற்போது அது மாறிவிடும் போல இருக்கிறது எனவும் கோபத்துடன் கொந்தளித்து கொண்டிருக்கிறார் இவர். இவரது செயலை கண்ட ரசிகர்கள், ஒரு காஃபிக்காக வனிதா செய்வது சிறுபிள்ளை தனமாக இருக்கிறது என்றும் வனிதாவின் ஆட்டம் ஆரம்பம், இனி ஷோ நன்றாக சூடு பிடிக்க போகிறது என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.