தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவு இடைவேளை – பெற்றோர்கள் சரமாரி புகார்!
தமிழகத்தில் பல தனியார் பள்ளிகளில் உணவு இடைவேளை கூட அளிக்காமல் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் தினமும் பசியால் வாடி வருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
உணவு இடைவேளை:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்துவதா, சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவதா என்பது குறித்து அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 3% அகவிலைப்படி (DA) உயர்வு? AICPI கணக்கீட்டு விவரங்கள் இதோ!
இதனையடுத்து தமிழகத்தில் தற்போது பெரும்பாலான பள்ளிகளில் சுழற்சி முறையில் தான் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளிகளில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வர உள்ள நிலையில் அம்மாணவர்களுக்கு மட்டும் முழு நேரமும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பிற வகுப்புகளுக்கு இரண்டு பேட்ச்கலாக தினமும் மூன்று மணி நேரம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் பேச் வகுப்புகள் காலை 8.30 முதல் 11.30 மணி வரை நடைபெற்று வருகிறது. 2 வது பேச் வகுப்புகள் 11.45 முதல் பிற்பகல் 2:45 வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் 2 வது பேச் மாணவர்களுக்கு மதியம் 2.45க்கு தான் வகுப்பு முடிவடைகிறது. அவர்கள் 3 மணிக்கு மேல் வீடு சென்று 4 மணிக்கு மதிய உணவை சாப்பிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதனால் மாணவர்கள் பசியால் வாடுகின்றனர். 2 வது பேச்க்கு செல்லும் மாணவர்களுக்கு பள்ளிகளில் மத்திய உணவு இடைவேளை அளிக்கப்படுவதில்லை தொடர்ந்து 3 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. சுழற்சி முறையில் அடுத்தடுத்து தொடர்ந்து வகுப்புகள் இருப்பதால் உணவு இடைவேளை விடுவதில் நடைமுறை சிக்கல் உள்ளதாகவும் பள்ளி நிர்வாகங்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது மாணவர்களுக்கு கட்டாயம் உணவு இடைவேளை அளிக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.