மாநிலம் முழுவதும் குடியிருப்பு பள்ளிகள் & விடுதிகள் மீண்டும் திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் வருகின்ற ஜனவரி 24ம் தேதி முதல் 1 லிருந்து 12ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு அனுமதித்துள்ள நிலையில் குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை திறக்கலாம் என்றும் தற்போது தெரிவித்துள்ளது.
விடுதிகள் திறப்பு
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வந்த கொரோனா பரவல் தொற்றானது தற்போது டெல்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் வீழ்ச்சியடைய துவங்கி இருக்கிறது. இதனால் இம்மாநிலங்களில் கொரோனா பேரலை தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து அரசு சில தளர்வுகளை அளிக்க முன்வந்துள்ளது. அந்த வகையில் டெல்லியில் உள்ள அனைத்து தனியார் அலுவலகங்களும் 50% ஊழியர்களின் வருகையுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
Post Office 5 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் வரை பெறலாம் – ஓய்வூதியதாரர்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டம்!
அதே போல மஹாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜனவரி 24ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட இருக்கும் நிலையில், அனைத்து குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளையும் மீண்டும் திறக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த துறை மற்றும் நகராட்சி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல்துறை பணிக்கு தேர்வானோர் கவனத்திற்கு – உடற்தகுதித்தேர்வு மாற்று தேதி அறிவிப்பு!
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை மீண்டும் திறப்பதற்கு முன்னாக முறையான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர மாணவர்கள் தங்கும் இடங்கள் அனைத்திலும் நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஒருங்கிணைந்த துறை மற்றும் நகராட்சி நிறுவனங்களுக்கு சமூக நீதி மற்றும் சிறப்பு உதவி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.