Post Office 5 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் வரை பெறலாம் – ஓய்வூதியதாரர்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டம்!
நாடு முழுவதும் நடுத்தர மக்கள், பெண்குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு நலன் அளிக்கும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்களில் ரூ.14 லட்சம் வரை ரிட்டன்ஸ் கிடைக்கும் ஒரு சிறந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மூத்த குடிமக்கள் திட்டம்:
நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்களில் தங்களது சேமிப்பு மற்றும் முதலீடுகளை செலுத்தி வருகிறது. அதில் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படும் அமைப்புகளில் முக்கியமானதாக அஞ்சல் துறை இருந்து வருகிறது. அதனால் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் மற்றும் டெபாசிட் செய்பவர்களுக்கு முதல் தேர்வாக அஞ்சல் துறை விளங்கி வருகிறது. இவ்வாறு அஞ்சல் துறையில் பெரும்பாலான மக்களின் பங்கு உள்ளதால் மத்திய அரசு அனைத்து விதமான மக்களுக்கும் ஏற்ற வகையில் பல்வேறு திட்டங்களை அஞ்சல் துறையில் செயல்படுத்தி வருகிறது.
காவல்துறை பணிக்கு தேர்வானோர் கவனத்திற்கு – உடற்தகுதித்தேர்வு மாற்று தேதி அறிவிப்பு!
அதாவது நடுத்தர மக்கள், பெண்குழந்தைகள், மூத்த குடிமக்கள் என அனைவரும் தங்களது முதலீட்டை செலுத்தி சேமிக்கும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்று தான் மூத்த குடிமக்களுக்கான திட்டம் ஆகும். இந்த திட்டம் ஓய்வுபெற்றவர்கள், முதலீடு செய்து நல்ல பலன் பெற திட்டமிடுவோர் மற்றும் தொழிலதிபர்கள் என அனைவருக்கும் சிறந்த திட்டமாக அமைகிறது. 5 ஆண்டுகள் இந்த திட்டத்தின் முதிர்வு காலம் ஆகும்.
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல், மீன்சந்தையில் அலைமோதிய மக்கள் – கொரோனா பரவும் அபாயம்!
மூத்த குடிமக்கள் திட்டத்தில் ரூ.1000 முதல் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அவ்வாறு 5 ஆண்டுகள் முடிவடையும் போது ரூ.14 லட்சம் வரை ரிட்டன்ஸ் பெற முடியும். இந்த திட்டத்திற்கான காலத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு நீட்டிக்க விரும்பினால் 3 ஆண்டுகள் நீட்டித்து கொள்ளலாம். இதுவரை மூத்த குடிமக்கள் திட்டத்திற்கு 7.4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க நீங்கள் 60 வயது நிறைவடைந்த ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.