இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இன்று முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை தடுக்க மாநில அரசுகள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு நடவடிக்கைகளை அமல்படுத்தின. இதன் காரணமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. அதனால் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பல மாதங்களுக்கு பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி – வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை!
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த மாநிலமான கர்நாடகாவில் தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கேரளா மற்றும் மகாராஷ்டிரா எல்லை உட்பட்ட 8 மாவட்டங்களில் வார இறுதிநாள் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பீதர், கல்புர்கி, பெலகாவி, விஜயபுரா ஆகிய வட கர்நாடக எல்லைப்புற மாவட்டங்களிலும், சாம்ராஜ்நகர், மைசூரு, குடகு மற்றும் தட்சின கன்னடம் ஆகிய தெற்கு மாவட்டங்களிலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் ஆகஸ்ட் 23 (இன்று) முதல் மாற்று நாட்களில் பள்ளிகள் மற்றும் பியூசி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். கொரோனா நிலைமையை ஆய்வு செய்த பின்னர் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த அமைச்சர்கள் நேரில் சென்று பள்ளிகளை பார்வையிட வலியுறுத்தியுள்ளார். மேலும் நேரடி வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கவும், கொரோனா விதிகளை பின்பற்றவும் பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.