உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி – வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை!
நைரோபியில் உலக இளையோர் U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வந்தது. அதில் நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
தடகள சாம்பியன்ஷிப்:
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற்றது. இந்தியாவில் இருந்து 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்றனர். இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் எரிந்து முதல் இடத்தை தட்டிச்சென்றார். இதனை தொடர்ந்து நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய ஈட்டி எறிதல் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நீரஜ் செய்த வரலாற்று சாதனையை இந்தியா முழுவதும் கொண்டாடி வந்தனர்.
JEE 2021 முதல்நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு – NTA வெளியீடு!
அதனை தொடர்ந்து கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் கடந்த சில நாட்களாக உலக இளையோர் U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மேலும் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டிய வாய்ப்பு 1 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் கை நழுவியது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
இப்போட்டியில் ஷைலி சிங் முதலில் 6.34 மீட்டரும், 2வதாக 5.98 மீட்டர் தாண்டியதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதியானது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஜூனியர் சாம்பியன் மஜா அஸ்காக் 6.60 மீட்டர் நீளம் தாண்டி தங்க பதக்கம் வென்றுள்ள நிலையில் ஷைலி சிங், 6.59 மீ நீளம் தாண்டியதனால் வெள்ளி பதக்கம் பெற்று நூலிழையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.