அடுத்த 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ஹிஜாப் விவகாரம் எதிரொலி!
கர்நாடகாவில் தற்போது பெரிய பிரளயத்தை உண்டு பண்ணி இருக்கும் ஹிஜாப் சர்ச்சையை சரி செய்யும் பொருட்டு, இன்று (பிப்.9) முதல் அடுத்த 2 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டிருக்கிறது.
விடுமுறை அறிவிப்பு
சமீபத்தில் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் அவர்கள் வகுப்பறைக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பிரச்சனையை உண்டு பண்ணி இருக்கிறது. அந்த வகையில் இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக குரல் கொடுக்க, மறுபக்கத்தில் இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கொண்டு பள்ளிக்கு வருகை தருவது என மாணவ, மாணவிகள் இடையே போராட்டங்கள் வெடித்துள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் ஓமிக்ரான் நோய்த்தொற்று பரவல் – திடீரென பொதுமுடக்கம் அமல்!
தொடர்ந்து போராட்டக்காரர்கள் பள்ளி வளாகங்களில் கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபட, காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி அவர்களை கலைக்க முற்பட்டனர். இதனால் கர்நாடகா மாநிலம் முழுவதும் ஒரு பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநிலத்தின் அமைதி மற்றும் மாணவர்களின் ஹிஜாப் உரிமைக்கான மனுவை உயர்நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. இப்போது இந்த ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நாடு முழுவதும் குரல்கள் எழுபப்பட்டு வருகிறது.
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – தொலைந்து விட்டால் புதிய அட்டையை பெறுவது எப்படி?
இந்த நிலையில், மாணவர்களிடையே அமைதியை நிலை நாட்டுவதற்காக மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அரசு மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகம் மற்றும் கர்நாடக மக்கள் அனைவரும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்திருக்கிறார்.