மீண்டும் அதிகரிக்கும் ஓமிக்ரான் நோய்த்தொற்று பரவல் – திடீரென பொதுமுடக்கம் அமல்!
சீனாவின் பெய்சே நகரில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் காரணமாக அந்நகரில் கடும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பொது முடக்கம்:
சீனாவின் உஹான் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் கொரோனா என்னும் உயிர்கொல்லி வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இந்த தொற்று எதிர்பாராத அளவு பாதிப்பு எண்ணிக்கையை அதிகபடுத்தி அசாதாரமான சூழலை ஏற்படுத்தியது. தடுப்பு நடவடிக்கையாக அந்நாட்டில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. மேலும் கட்டுப்பாடுகளாக பொதுமக்கள் வெளியில் செல்லும் பொது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும். தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி கணக்கீடு விவரங்கள் இதோ!
இந்த வைரஸ் சீனாவை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. இதிலிருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் கடந்த 2021ம் ஆண்டு பரவிய உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸ் எதிர்பார்த்த அதி வேகத்தில் பரவி பாதிப்பு எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் உயிரிழப்புகளை அதிகப்படுத்தியது. தற்போது கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து புதிய வகை ஓமிக்ரான் தொற்று பரவி வருகிறது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் – திருப்புதல் தேர்வு மாற்றம்?
சீனாவின் பெய்சே நகரில் ஓமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்நகரில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தடுப்பு பணியாக அந்நகரில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நகரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தொழில் நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது.