ஜனவரி 15 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு உத்தரவு!
கொரோனா வைரஸின் தொடர்ச்சியான அதிகரிப்பு காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜனவரி 15ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்
நாடு முழுவதும் கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உட்பட மற்ற கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை ஏற்படக் கூடும் என்று கருதிய ஜார்கண்ட் அரசாங்கம் மக்களின் பாதுகாப்பிற்காக புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்தது. அதன் படி ஒமிக்ரானின் அச்சம் காரணமாக மினி ஊரடங்கு கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சர் பன்னா குப்தா தற்போது அறிவித்திருக்கிறார்.
பொங்கல் தள்ளுபடி: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், புதிய கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜனவரி 15 வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர புதிய வழிகாட்டுதல்களில் முதன்மையாக, மக்கள் அதிகம் கூடும் நெரிசலான பொது இடங்களில் அரசு கவனம் செலுத்தி இருக்கிறது. குறிப்பாக நீச்சல் குளங்கள், பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உணவகங்கள், பார்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்கள் 50% திறனில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் இனி ஆன்லைன் வகுப்புகளுடன் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 15ம் தேதி வரை மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று (ஜன.3) ஒரு நாளில் மட்டும் 1,000 க்கும் மேற்பட்ட கொரோனா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.