தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட் – பொங்கல் பரிசு 2022 விநியோகம் துவக்கம்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான தை முதல் நாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இத்திருநாள் தமிழர்களின் திருநாள் என்றும் தமிழ் கலாச்சார பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் பரிசுத்தொகுப்பாக வழங்கபட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 15 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு உத்தரவு!
இந்த ஆண்டு ரூ.505 மதிப்புள்ள பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு உள்ளிட்ட 21 வகை பொருட்களை அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பு தமிழகம் முழுவதும் உள்ள 2,15,48,060 குடும்பங்களுக்கு வழங்கப்படும். மேலும் இத்திட்டத்திற்காக அரசு ரூ.1,17 ,70,000 ரூபாயை நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. பரிசுப் பொருட்களை விநியோகம் செய்ய ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
நாள் ஒன்றுக்கு ஒரு பகுதியில் 200 குடும்பங்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்கள் டோக்கன் முறையில் பொருட்களை விநியோகம் தொடங்கியது. பரவி வரும் ஓமிக்ரான் மற்றும் கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.