பொங்கல் தள்ளுபடி: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்து உள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி:
2021 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருந்தனர். இதனால் நகைக்கடை வியாபாரிகள் அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். மேலும் கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு திருமணங்கள் பெரிதும் நடைபெறவில்லை. இந்த ஆண்டு தொற்று கட்டுக்குள் இருந்ததால் திருமணங்களுக்கு அரசு அனுமதி அளித்து திருமணங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது தங்கம் விலை குறைக்கப்பட்டதால் திருமணத்திற்கு தங்கம் வாங்கும் மக்களும், நகை வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் – 6.8% வட்டியில் 20 லட்சம் வரை வருமானம்!
முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். இது புத்திசாலித்தனமான முதலீடாக பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை விவரம்:
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.36,3600 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.224 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.4,517க்கு விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி விலை விவரம்:
தங்கத்தோடு சேர்ந்து வெள்ளி விலையும் குறைந்து உள்ளது. தற்போது சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.