தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு வருகிற ஜூன் 13ம் தேதி அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இதில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமோ என்ற குழப்பம் உள்ளது. தற்போது திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.
பள்ளி திறப்பு
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி அறிவித்தபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால் வரும் கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
Flipkart நிறுவனத்தில் B.Tech படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வருகிற ஜூன் 13ம் தேதி முதல் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்த கல்வியாண்டு தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளி திறப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளதை பற்றி பார்ப்போம்.
இவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனால் அனைத்து பள்ளிகளும் மாணவர்களை வரவேற்கும் வகையில் பள்ளிகளுக்கான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு முடிக்க வேண்டும். அத்துடன் பள்ளிகளில் மின் இணைப்புகளில் மின் கசிவு, மின் கோளாறுகள் உள்ளிட்டவை சரி செய்ய வேண்டும். மேலும் சத்துணவுக் கூடங்களை சுத்தப்படுத்தி, சுகாதாரமான உணவு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதிலிருந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுவது உறுதியாகியுள்ளது.