தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் ஆட்டோவில் ஆபத்தான பயணம்? – நீதிமன்றத்தின் நறுக் கேள்வி!
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒரு நறுக் கேள்வியை கேட்டுள்ளது. அது அனைவரையும் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.
ஆட்டோ பயணம்:
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் வீடுகளில் இருந்து பள்ளிக்கு செல்ல ஏதுவாக பள்ளி பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இவ்வாறு பள்ளி பேருந்துகளில் மாணவர்கள் பயணிக்கும் சமயத்தில் விபத்துகள் ஏற்பட்டு மாணவர்களின் உயிர்கள் பலியாகும் சம்பவமும் தமிழகத்தில் நடந்துள்ளது. இதனால் தமிழக அரசு பள்ளி வாகனங்களுக்கு என்று தனிப்பட்ட வரைமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் வகுத்து உள்ளது.
Exams Daily Mobile App Download
இவ்வாறு அரசு அறிவித்துள்ள அனைத்து அறிவுறுத்தல்களையும் பள்ளிகள் முறையாக பின்பற்றி பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்கிறதா?என்று அரசு அதிகாரிகள் மூலம் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்கள் ஆட்டோவில் பள்ளிக்கு செல்வது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இது தொடர்பாக எழுப்பியுள்ள கேள்வி அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
கவனம் மக்களே.. தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் – வானிலை ஆய்வு மையம் தகவல்!
Follow our Instagram for more Latest Updates
அதாவது, பள்ளிக்கு மாணவர்களை ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது என்றும், பள்ளி வாகனங்களுக்கு அதிக அளவிலான விதிகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், ஆட்டோக்கள் செயல்பாட்டிற்கு என்ன விதி இருக்கிறது? அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும் என்றும், மேலும் பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.