கவனம் மக்களே.. தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
கவனம் மக்களே.. தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
கவனம் மக்களே.. தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
கவனம் மக்களே.. தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 1ம் தேதி வரை கனமழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று (அக்.28) விழுப்புரம்‌, காஞ்சிபுரம்‌, கடலூர்‌, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து (அக்.29) தஞ்சாவூர்‌, கடலூர்‌, திருவாரூர்‌, தூத்துக்குடி, மயிலாடுதுறை, விழுப்புரம்‌, நாகப்பட்டினம்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, தென்காசி, சிவகங்கை, தூத்துக்குடி, தேனி மற்றும்‌ புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அடுத்தாக அக் .30ம் தேதி திருவாரூர்‌, விருதுநகர்‌நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌,புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல்‌, இராமநாதபுரம்‌, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புதுவையின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் அக்.31 (திங்கட்கிழமை) தமிழகத்தில் இராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, வேலூர்‌, திருவண்ணாமலை, திண்டுக்கல்‌, செங்கல்பட்டு, திருப்பத்தூர்‌, திருநெல்வேலி, தேனி, விழுப்புரம்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்‌சி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகரிக்கும் புதுவித பூஞ்சை நோய் தொற்று.. WHO வெளியிட்ட தகவல் – பொது மக்கள் அதிர்ச்சி!

அதனை தொடர்ந்து நவ.01ம் தேதி புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யும் என்றும் தமிழகத்தில் இராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌ திருவள்ளூர்‌, வேலூர்‌ மற்றும்‌ காஞ்சிபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, விழுப்புரம்‌, கடலூர்‌,செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, தேனி, மயிலாடுதுறை,தென்காசி, திண்டுக்கல்‌, திருநெல்வேலி, நாகப்பட்டினம்‌, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!