அதிகரிக்கும் புதுவித பூஞ்சை நோய் தொற்று.. WHO வெளியிட்ட தகவல் – பொது மக்கள் அதிர்ச்சி!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை மற்றொரு நோய் தாக்கி வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
பூஞ்சை நோய்:
உலகம் முழுவதும் தற்போது வரை மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி, கட்டுப்பாடுகள் போன்றவற்றால் பாதிப்புகள் குறைந்துள்ளதே தவிர முழுமையாக வைரஸ் இன்னும் அழியவில்லை. இந்த நிலையில் கொரோனாவின் மாறுபாடான ஒமிக்ரான் வெவ்வேறு நிலைகளை அடைந்து பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மேலும் இந்த பூஞ்சைகள் மூளை மற்றும் நுரையீரலை தாக்கும் என்றும் கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்களையும் பூஞ்சை நோய் தாக்கி வருகிறது.
தமிழகத்தில் இயற்கை புகையிலைக்கு ஆதரவு – உயர்நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
கடந்த வருடம் இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தீவிரமெடுத்து பரவிய கருப்பு பூஞ்சை நோய் கொரோனா நோயாளிகளை தொடர்ந்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை தாக்கியது குறிப்பிடத்தக்கது.