KG – 8ம் வகுப்பு வரை அக்.18 முதல் பள்ளிகள் திறப்பு – மாநிலங்களுக்கு இடையே பயண அனுமதி!
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் மாநிலத்தில் KG முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 18ம் தேதி பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையே பயணிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
இந்தியாவில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த நாடு தழுவிய பொதுமுடக்கத்திற்கு மாற்றாக மாநில வாரியாக பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியது. இதில் தொற்று எண்ணிக்கைக்கு ஏற்ப தளர்வுகள் வழங்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு உள்ளன. மறுபுறம் கொரோனா 3வது அலை அச்சம், பண்டிகை தினங்களுக்கு மத்தியில் கட்டுப்பாடுகளில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
சென்னை: அதிரடி விலை குறைப்பில் ஆபரணத் தங்கம் – இன்றைய நிலவரம்!
சிக்கிம் அரசு வெளியிட்டு உள்ள முக்கிய அறிவிப்பில் மாநில கல்வித் துறையின் கீழ் செயல்படும் கேஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வருகிற அக்டோபர் 18 முதல் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் மாநிலங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளது. கொரோனா நெகட்டிவ் ஆர்டி-பிசிஆர் சோதனை அறிக்கைகள் அல்லது தடுப்பூசி சான்றிதழ்களை சமர்பிக்காமல் இதனை மேற்கொள்ளலாம். கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு சிக்கிம் அரசு இந்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
SBI வங்கியின் தங்க டெபாசிட் திட்டம் – வட்டி விபரங்கள் & முதலீடு செய்வது எப்படி?
இது பண்டிகை காலங்களில் பயணம் செய்ய விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு உதவும். ஏற்கனவே செப்டம்பர் 27 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அக்.18 முதல் ஆரம்பத்தில் 50 சதவீத மாணவர்களை மட்டுமே பெற்றோரின் ஒப்புதலுடன் மாற்று நாட்களில் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இது நிலைமையை கண்காணிப்பதன் அடிப்படையில் மேலும் அதிகரிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.