சென்னை: அதிரடி விலை குறைப்பில் ஆபரணத் தங்கம் – இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது. பண்டிகை தினத்தையொட்டி தங்கம் விலை குறைந்தது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நகை விலை குறைந்ததை அடுத்து மக்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தங்க விலை நிலவரம்:
தமிழகத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் நகை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு லாபம் அதிகரிக்கும் நிலையில் தங்கம் விலை உயருகிறது. மேலை நாடுகளில் தங்கம் என்பது ஒரு முதலீடு தான். ஆனால் நம் நாட்டில் பெண்கள் தங்க அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தங்க விலை உயர்வால் திருமணத்திற்காக நகை வாங்க நினைப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்க நகை மேல் ஆசை கொள்ளாத பெண்களே இருக்க முடியாது எனலாம்.
SBI வங்கியின் தங்க டெபாசிட் திட்டம் – வட்டி விபரங்கள் & முதலீடு செய்வது எப்படி?
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி இருந்தாலும் தங்கத்தின் விலையானது ஒரு நிலையாக இல்லை. காலையில் ஒரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. மீண்டும் மாலையில் வேறு விலை என்று அடுத்தடுத்து விலை ஏரியும் இறங்கியும் வருகிறது. அக்டோபர் மாதத்தில் பண்டிகை அதிகம் வருவதால் தங்க விலை உயர்ந்தே காணப்பட்டது. ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் என்பதால் தங்கம் வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – நவ.19 முதல் நேரடி விமான சேவை!
இந்த நிலையில் தொடர் உயர்விற்கு பின் தங்க விலை இன்று சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 35,552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 4,444 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரண தங்கம் 38,464 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 65 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ 65,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.