தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கும் கோடை விடுமுறை கிடைக்கும் வகையில் பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்குதலுக்கு பின்பு பள்ளிகள் திறக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு முதல் கட்டமாக 9 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பிறகு 1 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இதனையடுத்து நடப்பாண்டு பொதுத்தேர்வுகளை நடத்தும் நோக்கில் விரைந்து பாடங்கள் நடத்தப்பட்டு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் பரவல் வேகமெடுத்தது.
தமிழக அரசின் பேருந்து பயண டிக்கெட் கட்டண விலை உயர்வு – அமைச்சர் ஷாக் அறிவிப்பு!
அதனால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஓமிக்ரான் பரவலின் போது ஓரளவு மக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டிருந்ததால் பெரிதாக பாதிப்புகள் இல்லை. அதனால் விரைந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு தற்போது அதன்படி தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து மே 14 முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பள்ளி ஆசிரியர்களுக்கும் கோடை விடுமுறை கிடைக்கும் வகையில் பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு 31ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு ஜூன் 1 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் ஜூன் 17 வரை விடைத்தாள் திருத்தம் நடைபெறும். இதனால் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறை கிடைக்காத நிலை உள்ளது. எனவே பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.