தமிழக அரசின் பேருந்து பயண டிக்கெட் கட்டண விலை உயர்வு – அமைச்சர் ஷாக் அறிவிப்பு!
தமிழகத்தில் இருந்து தொலை தூரத்தில் பயணிக்கும் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் விலையை உயர்த்த அதற்கான பட்டியல் தயாராக உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
பேருந்து கட்டண உயர்வு:
தமிழக அரசு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஆனால் அவற்றில் மிகவும் வரவேற்பை பெற்ற திட்டம் என்றால் அது நகரப்பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள மகளிர் இலவச பயண திட்டமாகும். அன்றாடம் பணிக்கு செல்லும் பெண்கள் பயணத்திற்காக செலவழிக்கும் பணத்தை உபயோகமாக மாற்றும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆதார் கார்டை அப்டேட் செய்ய நினைப்போருக்கான முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
ஆனால் எதிர்க்கட்சி தரப்பில் இருந்து இந்த திட்டத்திற்காக பல குறைபாடுகள் மற்றும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் மேற்கொள்ளும் வகையில் மாற்ற வேண்டும், ஆண்களுக்கும் இலவச பயணத்திற்கான அறிவிப்பு வழங்க வேண்டும், குறைவான பேருந்துகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் இயக்கப்படுகிறது என்பன போன்ற புகார்கள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக முதல்வர் அவர்கள் இது குறித்து பெண்களிடம் நேரடியாக கேட்டறிந்து அவர்கள் மகிழ்ச்சியாக பயணிப்பதாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தற்போது பெரம்பலூர் அருகே புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து போக்குவரத்தை, போக்குவரத்துக்கு துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆந்திரா, கேரளா அரசு பேருந்துகளில் உள்ள தொலைதூர பயண பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து அதற்கேற்ப அதிகாரிகள் கட்டண உயர்வு பட்டியலை தயார் செய்துள்ளனர். ஆனால் இதை பற்றி முதல்வர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.