அக்.25ம் தேதி 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடகாவில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதை அடுத்து அக்டோபர் 25 ம் தேதி முதல் 1 – 5 வரையிலான தொடக்க நிலை வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் 50 % மாணவர்கள் மட்டுமே ஒரு வகுப்பில் அமர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது. இதனால் தொற்று ஓரளவு குறைய ஆரம்பித்ததும் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்கள் பொது தேர்வுக்கு தயாராகி வந்தனர்.
TN TRB முதுநிலை ஆசிரியர் வயது வரம்பு நீட்டிப்பு – மக்கள் நீதி மய்யம் புதிய கோரிக்கை!
இந்த நேரத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்ததால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் கல்வி தொடர்ந்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது. இதன் விளைவாக கொரோனா பரவல் இறங்கு முகத்தில் சென்றது. இந்த நேரத்தில் அனைத்து மாநிலங்களும் மீண்டும் பள்ளிகளை திறந்தது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் 9 – 12 வரை உள்ள வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை? வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மற்ற மாநிலங்களை போல கர்நாடகாவிலும் கடந்த ஆகஸ்ட் 25 ம் தேதி முதல் 9 – 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன் பிறகு அடுத்த கட்டமாக 6 – 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வரும் அக்டோபர் 25ம் தேதி முதல் 1 முதல் 5ம் வகுப்பு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 50% மாணவர்கள் மட்டுமே அமர வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் மதியம் வரை மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.