TN TRB முதுநிலை ஆசிரியர் வயது வரம்பு நீட்டிப்பு – மக்கள் நீதி மய்யம் புதிய கோரிக்கை!

0
TN TRB முதுநிலை ஆசிரியர் வயது வரம்பு நீட்டிப்பு - மக்கள் நீதி மய்யம் புதிய கோரிக்கை!
TN TRB முதுநிலை ஆசிரியர் வயது வரம்பு நீட்டிப்பு - மக்கள் நீதி மய்யம் புதிய கோரிக்கை!
TN TRB முதுநிலை ஆசிரியர் வயது வரம்பு நீட்டிப்பு – மக்கள் நீதி மய்யம் புதிய கோரிக்கை!

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமன வயது வரம்பு நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் பணி:

தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான ஓய்வுபெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தி கடந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன வயது வரம்பு 57 லிருந்து பொது பிரிவினருக்கு 40 என்றும், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சீர்மரபினர் என மற்ற பிரிவினருக்கு 5 ஆண்டுகள் விலக்கு அளித்து 45 என்றும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்தகைய அறிவிப்பானது கொரோனா காலகட்டத்தில் கொண்டு வரப்பட்டது. இதனை கண்டித்து தற்போது ஆட்சியில் இருக்கும் முக ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர்களை வஞ்சிக்கும் விதமாக இந்த அரசாணை அமைக்கப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு வைத்தார். மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த அரசாணையை திரும்ப பெறுவோம் என்று உறுதி தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை? வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

தற்போது திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதனால் முக.ஸ்டாலின் அவர்களிடம் பல முறை இது குறித்து கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனாலும் நீண்ட நாள் மௌனம் மட்டுமே பதிலாக இருந்து வந்தது. பின்னர் ஏதோ கடமைக்கு செய்யும் விதமாக ஆசிரியர் பணி நியமன வயதை பொதுப்பிரிவினருக்கு 40 லிருந்து 45 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சீர்மரபினர் என மற்ற பிரிவினருக்கு 5 ஆண்டுகள் விலக்கு அளித்து 50 ஆகவும் மாற்றி அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணை இந்த வருடத்தோடு, அதாவது 31.12.2021 ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவித்திருக்கிறார். பின்னர் பொதுப்பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட 45 லிருந்து 42 ஆகவும், மற்ற பிரிவினருக்கு 50 லிருந்து 47 ஆகவும் 3 ஆண்டுகள் குறைக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

தமிழகத்தில் அக். 21ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

இந்த அரசாணை கொடுப்பது போல் கொடுத்துவிட்டு மீண்டும் பறித்துக்கொண்டது போல் ஆகிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது. இந்த அரசாணை வெளியிடப்பட்டதால் ஆசிரியர் பணியை தினசரி கனவாக கண்டு வந்த பெரும்பாலானோர்க்கு வெறும் கனவாகவே முடிந்துவிடுவது போல் அமைந்துள்ளது. மேலும் இந்த அரசாணையை திரும்ப பெறக்கோரி திருச்சியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அவரது வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். எனவே திமுக அரசானது எதிர்க்கட்சியாக இருந்தபோது வலியுறுத்தியதைப் போலவே உச்ச வயது வரம்பை 57 அல்லது 59 ஆக்குவதற்கான ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!