தமிழகத்தில் அக். 21ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
கருங்கல் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 21ம் தேதி குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தவறாது துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் மின் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இது குறித்து அந்தந்த பகுதி மின் வரிய செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் அறிவிப்பு செய்கின்றனர்.
வீட்டிலிருந்தே வங்கியில் பர்சனல் லோன் பெறலாம்- அப்ளை செய்வது எப்படி?
மின் பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்களின் அருகே மின் விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டு சரி செய்யப்படுகிறது. மேலும் மின் கம்பங்களில் வயர்கள் மாற்றுதல், மின் இணைப்புகளை புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெறுகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து அக்டோபர் 21ம் தேதி அன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பாலூர், திப்பிரமலை, புட்ராடி, தெருவுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை – அமைச்சர் விளக்கம்!
அதே போல செந்தறை, மிடலாம், நட்டாலம், பள்ளியாடி, பாறைக்கடை, செல்லக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் வரும் வியாழக்கிழமை மின்தடை ஏற்பட இருப்பதால் அந்த பகுதியினை சேர்ந்த மக்கள் இதனை கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற் போல தங்களது வேலைகளை முன்னரே செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.