வீட்டிலிருந்தே வங்கியில் பர்சனல் லோன் பெறலாம்- அப்ளை செய்வது எப்படி?

0
வீட்டிலிருந்தே வங்கியில் பர்சனல் லோன் பெறலாம்- அப்ளை செய்வது எப்படி?
வீட்டிலிருந்தே வங்கியில் பர்சனல் லோன் பெறலாம்- அப்ளை செய்வது எப்படி?
வீட்டிலிருந்தே வங்கியில் பர்சனல் லோன் பெறலாம்- அப்ளை செய்வது எப்படி?

விட்டிருந்தபடியே ஆன்லைன் மூலம் வங்கியில் பர்சனல் லோன் பெற முடியும். அதற்கு விண்ணப்பிப்பது தொடர்பான விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பர்சனல் லோன்:

ஒரு தனிநபருக்கு அவரின் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படுவதே பர்சனல் லோன் ஆகும். முன்பெல்லாம் வங்கியில் லோன் பெறுவதற்கு வங்கிக்கும் வீட்டிற்கும் அத்தனை முறை நடக்க வேண்டியிருக்கும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியினால் நாம் இருந்த இடத்திலேயே உலகத்தை பற்றி அறிந்துகொள்கிறோம். அதே போல அனைத்து வசதிகளும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டது. அதனை தொடர்ந்து லோன் வசதியும் அப்படி மாறிவிட்டது. வீட்டிலிருந்தபடியே தனிநபர் லோன் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்கென்று ஒரு சில தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. லோன் அப்ளை செய்யும் நபர் தனியார், அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் என ஏதேனும் ஒரு துறையில் வேலை பார்ப்பவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை – அமைச்சர் விளக்கம்!

லோன் அப்ளை செய்யும் நபர் 23 வயது பூர்த்தி ஆனவராக இருத்தல் அவசியம். இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். கடன் மதிப்பு சரியானதாக இருக்க வேண்டும். மாத வருமானம் சமர்ப்பிக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். ஒரு சில ஆவணங்களை மட்டும் சமர்ப்பித்தால் போதும் லோன் வழங்கப்பட்டுவிடும். அந்த முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கருதப்படுகிறது. ஆதார் பயன்படுத்தி லோன் பெறுவது மிகவும் எளிதாகும். முதலில் பர்சனல் லோன் பெற விரும்பும் வங்கியின் செயலி அல்லது இணையதளத்திற்கு செல்லவேண்டும்.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – வெளியானது சூப்பர் அறிவிப்பு!

பின்னர் அங்கு லோன் ஆப்ஷனை தேர்வு செய்து பர்சனல் லோன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் உங்களுக்கு பர்சனல் லோன் கிடைக்க தகுதி இருக்கிறதா என்பதை காண்பிக்கும். தகுதி உறுதி செய்யப்பட்ட பிறகு apply now கொடுக்க வேண்டும். அதில் தோன்றும் ஆன்லைன் படிவத்தில் தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் அதனை பூர்த்தி செய்யவேண்டும். அதனை தொடர்ந்து அந்த வங்கியில் இருந்து வெரிஃபிகேஷன் போன் வரும். அதில் பேசும் வங்கி ஊழியர் தகவல்கள் அனைத்தும் சரியா என கேட்பார். பின்பு உங்களது வங்கிக்கணக்கில் லோன் தொகை செலுத்தப்பட்டு விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!