தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா தாக்கி வந்த நிலையில் விடுமுறை வழங்கப்பட்டு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – வெளியானது சூப்பர் அறிவிப்பு!
9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது பள்ளிகள் திறப்பதை தொடர்ந்து சுத்திகரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள்,அங்கன்வாடி பள்ளிகள் திறப்பது குறித்த கேள்விகள் வெளியானது.
தமிழகத்தின் ‘இந்த’ 18 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் நவம்பர் 1 முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறப்பதற்கு அரசு இன்னும் தயாராகவில்லை என்று பதில் அளித்துள்ளார். மேலும் ஆதிதிராவிட பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி முடிந்த பிறகு மாலை 4.15 மணி முதல் 5.30 மணி வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.