தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – வெளியானது சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசை எதிர்த்து முந்தைய ஆட்சியில் அரசு ஊழியர்களின் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட போராட்டக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துவதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அவர்கள் பிறப்பித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் உத்தரவு:
தமிழகத்தில் கடந்த கடந்த 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தினர். இந்த வேலை நிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணி நீக்கக் காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டுமென அரசு ஊழியா் சங்கங்களைச் சோ்ந்தவா்கள் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் ‘இந்த’ 18 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
அதில், பாதிக்கப்பட்ட அரசு ஊழியா்களின் வேலை நிறுத்த காலம் மற்றும் தற்காலிகப் பணிநீக்க காலம் ஆகியன பணிக் காலமாக முறைப்படுத்தப்படும் என்றும் வேலை நிறுத்த போராட்டத்தின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில் கலந்தாய்வின் போது அவர்களுக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் போராட்டக் காலத்தில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும் எனவும், அந்த ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக பதவி உயர்வு ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவையும் சரி செய்யப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
PF பயனர்கள் கவனத்திற்கு – 1.65 கோடி வரை பெறலாம்! முழு விபரம் இதோ!
அதனை செயல்படுத்தும் வகையில் அதற்கான உத்தரவு வெளியிடப்படுகிறது. 2016, 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளின் போராட்ட காலங்கள் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களுடன் தொடர்புடைய தற்காலிகப் பணிநீக்க காலமும் பணிக்காலமாக முறைபடுத்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பதவி உயர்வு பெறுவதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலா்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.