PF பயனர்கள் கவனத்திற்கு – 1.65 கோடி வரை பெறலாம்! முழு விபரம் இதோ!
இந்தியாவில் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பிஎப் பயனர்களுக்கு 8.5% வட்டியை வழங்குகிறது. இதன் மூலம் நாம் உங்கள் சம்பளத்தை பொறுத்து எதிர்காலத்தில் அதிகபட்சமாக 1.65 கோடி வரை உங்கள் பிஎப் கணக்கில் இருந்து எடுக்க முடியும்.
பிஎப் தொகை:
இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களின் வருங்காலத்தில் உதவும் வகையில் அவர்களின் ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொகையுடன் அரசு வட்டி தொகை செலுத்தப்பட்டு கூடுதல் தொகை வரவு வைக்கப்படுகிறது. இந்த தொகை ஊழியர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஜூன் மாதத்தில் 12.8 லட்சம் பிஎப் கணக்குகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பணியாளர் ஈபிஎப்ஓ அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பிஎஃப் கணக்கு வைத்திருப்போர்களுக்கு 7 லட்சம் வரை காப்பீடு சலுகையும் உள்ளது.
CTET ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு – CBSE கல்வி வாரியம் வெளியீடு!
தற்போது ஈபிஎப்ஓ அமைப்பு 2020 – 2021 ஆம் ஆண்டுக்கு PF வட்டி விகிதம் 8.5% வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது மற்ற வங்கி சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியைக் காட்டிலும் கூடுதல் வட்டித் தொகையாகும். கடந்த ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால் மக்கள் வேலையிழந்து தவித்து வந்த இக்கட்டான நேரத்தில் ஏராளமானோர் தங்களின் பிஎப் தொகையை எடுத்தனர். இதனால் நடப்பு ஆண்டிற்கான PF வட்டித் தொகை விரைவில் ஊழியர்களின் பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ஈபிஎப்ஓ தெரிவித்துள்ளது.
தமிழக பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – முக்கிய கோரிக்கை!
வட்டி விகிதம் அதிகரிப்பால் இதன் மூலம் PF கணக்குதாரர் வருங்காலத்தில் ஓய்வூதிய தொகையாக அதிக பணத்தை பெற முடியும். 8.5% வட்டி விகிதப்படி ஒருவரின் மாத சம்பளம் ரூ.25,000 என்றால் அடுத்த 36 வருடங்களில் பிஎப் கணக்கு வைத்திருந்த அந்த நபர் 1.65 கோடி ரூபாயை அந்த கணக்கில் இருந்து பெற முடியும். உங்களின் பிஎப் இருப்புத் தொகையை எஸ்எம்எஸ் மூலமாகவும், இணையதளம் வாயிலாகவும் எளிதாக நாம் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.