தமிழக பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊக்கத்தொகை மற்றும் முன்பணம் ஆகியவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தீபாவளி போனஸ்:
இந்த ஆண்டு வரும் நவம்பர் 4ம் தேதி அன்று இந்து பண்டிகையான தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் அனைவரும் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிர்வாக பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு என்று முன்பணம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொதுத்துறை நிர்வாக பணியாளர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகை வழங்கப்படுவது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
தமிழகத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம், ரூ.1000 ஊக்கத்தொகை – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இதனை கண்டித்தும், நடவடிக்கை எடுக்குமாறும் பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளார். இது குறித்த அறிவிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, ‘தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அப்படியாக இருந்தும் பொதுத்துறை நிர்வாக பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் முன்பணம் வழங்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இப்பொது வழங்கினால் தான் அவர்கள் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க முடியும்.
ஆண்டுதோறும் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே தீபாவளி பணம் வழங்கப்பட்டு விடும், ஆனால் இந்த முறை வழங்காமல் இருப்பது கவலையடைய வைத்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் வேலைபார்க்கும் நிறுவனங்கள் என்றால் மின்சாரவாரியம் மற்றும் போக்குவரத்துத்துறை தான். தீபாவளி திருநாள் அன்று கூட இவர்கள் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக 10 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் தயார்!
அதே போல் கடந்த 25 ஆண்டுகளாக 20 சதவீதம் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதையும் கடந்த ஆண்டு கொரோனா பரவலை காரணம் காட்டி 10 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது. பணியாளர்களின் நலன் கருதி அரசு இந்த முறை ஊக்கத்தொகையினை 25 சதவீதமாக வழங்க வேண்டும்’ இவ்வாறாக தமிழக அரசிற்கு கோரிக்கை ஒன்றினை வைத்துள்ளார்.