தமிழகத்தில் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை? வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு மாத விடுமுறைகளை மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ் வழங்கி வருகிறது. இந்த வாரத்தின் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விடுமுறை:
வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன் பெறவும் மற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை அட்டவணை படி வார இறுதி நாட்களை தவிர, பண்டிகை விடுமுறைகள் சில உள்ளூர் அல்லது பிராந்திய கிளைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. பொது விடுமுறைகள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள வங்கிகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
தமிழகத்தில் அக். 21ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
மேலும் வங்கிகளுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் பல்வேறு பண்டிகைகள் வருகின்றன. ஆனால் இந்த பண்டிகை அனைத்தும் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும். தற்போது பண்டிகை காலம் நிலவி வருவதால் 6 நாட்கள் தொடர்ச்சியாக வங்கிகளுக்கு விடுமுறை என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது விடுமுறை குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
விடுமுறை நாட்கள்:
- அக்டோபர் 18 – திங்கட்கிழமை – கதி பிஹு (குவகாத்தி – அசாம்)
- அக்டோபர் 19 – செவ்வாய் கிழமை – ஈத்-இ-மிலாத் அல்லது முகமது நபியின் பிறந்தநாள் (குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஆந்திரா, தெலுங்கானா, ஜம்மு, காஷ்மீர், உத்தரபிரதேசம், கேரளா, டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட்)
- அக்டோபர் 20 – புதன்கிழமை – மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள், லட்சுமி பூஜை, ஐடி-இ-மிலத் (திரிபுரா, பஞ்சாப், மேற்கு வங்கம், கர்நாடகா, ஹரியானா மற்றும் இமாச்சல பிரதேசம்)
- அக்டோபர் 22 – வெள்ளிக்கிழமை – ஈத்-இ-மிலாத்-நபி (ஜம்மு-காஷ்மீர்)
- அக்டோபர் 23 – நான்காவது சனிக்கிழமை
- அக்டோபர் 24 – ஞாயிற்றுக்கிழமை