1 முதல் 4ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் நியமனம் – வெளியான தகவல்!

0
1 முதல் 4ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் நியமனம் - வெளியான தகவல்!
1 முதல் 4ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் நியமனம் - வெளியான தகவல்!
1 முதல் 4ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு, ஆசிரியர்கள் நியமனம் – வெளியான தகவல்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் முழுமையாக மாணவர்கள் பள்ளிக்கு திரும்பாததால் ஆசிரியர்களுக்கு பணி வழங்குவது என்பது இயலாத காரியமாக உள்ளது. மேலும் புதிய ஆசிரியர்களை நியமிப்பது நடப்பு கல்வியாண்டில் சாத்தியமில்லை என்று அம்மாநில பள்ளி நிர்வாகங்கள் கூறுகின்றன.

ஆசிரியர் பணி:

இந்தியாவில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவுவதால் முதல் கட்டமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையிலும் மாணவர்கள் கல்வியில் பாதிப்படையாத வண்ணம் பாடங்கள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. தற்போது அரசின் முயற்சியால் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த திட்டமிட்டு மாநில அரசுகள் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டது.

மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு? கொரோனா புதிய பாதிப்புகள் எதிரொலி!

அதன்படி அனைத்து மாநிலங்களும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு அரசின் நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் முழுமையாக குறையாத காரணத்தினாலும், மூன்றாம் அலை கொரோனா பரவும் அது குழந்தைகளை தாக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். முழுமையாக மாணவர்கள் பள்ளிக்கு திருப்பாத இந்த நேரத்தில் புதிய ஆசிரியர்களை நியமிப்பது இயலாத ஒன்றாகும். ஏற்கனவே கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமான தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலையிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களை தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால் வேலையிழந்துள்ளனர்.

PMJDY கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ரூ.2 லட்சம் காப்பீடு! SBI வங்கி அறிவிப்பு!

பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் என இரண்டும் நடைபெறுவதால் அனைத்து ஆசிரியர்களையும் பள்ளிக்கு வரவழைக்க முடிவதில்லை. கொரோனா காலத்தில் பெற்றோர்களும் முழு கல்வி கட்டணத்தை செலுத்துவதில்லை. எனவே ஆசிரியர்களுக்கு முழு சம்பளத்தையும் தர இயலவில்லை என்று அம்மாநில பள்ளி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் 100% பள்ளிக்கு வந்தால் மட்டுமே புதிய ஆசிரியர்களை நியமிக்க முடியும். அது நடப்பு கல்வியாண்டில் அது முடியாது என்கின்றனர். மஹாராஷ்டிராவில் அடுத்தகட்டமாக 1 முதல் 4ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை கருத்து கேட்பு நடத்தி ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!