காணாமல் போன தனத்தின் குழந்தை, பதறும் அம்மா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள் ஷாக்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடந்து வருவது தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இன்றைய எபிசோடில் வர உள்ள காட்சிகளை இந்த பதிவில் காண்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்த ஒற்றுமை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. அந்த வீட்டின் ஆண்கள் வழக்கம் போல் ஒற்றுமையாக உள்ள போதிலும், பெண்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது கதையின் போக்கை மாற்றியுள்ளது. வீட்டின் கடைக்குட்டி தம்பி கண்ணன் குடும்பத்தினருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர், கண்ணனை வீட்டை விட்டு அனுப்பி விட்டனர்.
இன்று தனம் மற்றும் மூர்த்தியின் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா நடக்கிறது. இதற்காக குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக கூடியுள்ளனர். அப்போது, என்ன பெயர் வைக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடக்கிறது. அப்போது தனம் பாண்டியன்-ன்னு மாமா பெயர் தான் வைக்கணும் என்று சொல்கிறார். உடனே தனத்தின் அம்மா மற்றும் முருகன் நாங்கல்லாம் குழந்தையை எப்படி பெயர் சொல்லி கூப்பிட முடியும். இது ஜாதகத்துக்கு இருக்கட்டும். வேறு ஒரு பெயர் வைங்கன்னு சொல்கிறார்கள்.
இந்த முடிவுக்கு ஜீவா சரி என்று ஒத்துக்கொள்ள மீனா கோவப்படுகிறார். அப்போது, தனம் அத்தை மற்றும் மாமா பெயரை சேர்த்து வைக்கலாம் என்று சொல்கிறார். உடனே கதிர், லட்சுமண பாண்டியன் என்ற பெயரை கூறுகிறார். அனைவரும் இந்த பெயர் நன்றாக இருப்பதாக கூறுகிறர்கள். ஆனால் கஸ்தூரி மட்டும் பெயர் நன்றாக இல்லை என்று சொல்கிறார். இந்நிலையில், குழந்தையை பார்க்க வேண்டும் என்று கண்ணன் மீனாவிடம் கேட்க, மீனாவும் குழந்தையை தூக்கி சென்று கண்ணனிடம் கொடுக்கிறார்.
விஜயின் ‘சர்கார்’ வசூலை பின்னுக்கு தள்ளிய ரஜினியின் ‘அண்ணாத்த’ – ரசிகர்கள் கொண்டாட்டம்!
கண்ணன் குழந்தையை பார்த்து அழுகிறான். அப்போது, தனத்தின் அம்மா தொட்டிலில் போட்ட குழந்தையை காணாமல் பதறுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விட்டது. குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா முடிந்த பின்னர் வீட்டில் பெரிய சண்டை வருவது இதனால் உறுதியாகியுள்ளது.