மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு? கொரோனா புதிய பாதிப்புகள் எதிரொலி!
இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா புதிய வழக்குகளுக்கு மத்தியில் மீண்டும் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என ஸ்ரீநகர் துணை கமிஷனர் எச்சரிகை விடுத்துள்ளார்.
முழு ஊரடங்கு
கடந்த மாதத்தில் இருந்து மீண்டுமாக சரியத் துவங்கிய கொரோனா 2ம் பேரலை தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த 2 வாரமாக அதிகரித்து வரும் கொரோனா புதிய வழக்குகளின் மத்தியில் மீண்டுமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜம்முவின் ஸ்ரீநகர் பகுதியில் 8 இடங்கள் மைக்ரோ கண்டெய்ன்மென்ட் மண்டலங்களாக மாவட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
PMJDY கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ரூ.2 லட்சம் காப்பீடு! SBI வங்கி அறிவிப்பு!
அந்த வகையில் ஸ்ரீநகர் நகரில் உள்ள படாமலூ, ஜாடிபால், எஸ்ஆர் கன்ஜ் மற்றும் கன்யார் ஆகிய பகுதிகள் மருத்துவ மண்டலங்களின் கீழ் வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, ஸ்ரீநகரில் மட்டும் மொத்தம் 82 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (DDMA) தலைவரும் ஸ்ரீநகர் துணை ஆணையர் முகமது அய்ஜாஸ் ஆசாத் கூறுகையில், ‘ஜம்முவில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளூர் பூட்டுதல்களை விதிக்க ஸ்ரீநகர் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கொரோனா தொற்றின் நேர்மறை வழக்குகளின் சமீபத்திய அதிகரிப்பு காரணமாக விலைமதிப்பற்ற உயிர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்க மீண்டும் முயற்சித்துள்ளோம்’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு மத்தியில் ஸ்ரீநகர் தவிர ஜம்முவின் மற்ற 19 மாவட்டங்களில் இருந்து கொரோனா வழக்குகள் ஒற்றை இலக்கத்தில் அல்லது பூஜ்யத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் ஆதார் & பான் கார்டு என்ன ஆகும்? தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்!
என்றாலும் மக்கள் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், ஜம்முவில் மூன்றாவது அலை தொடங்குவதற்கு ஸ்ரீநகர் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் ஜம்முவில் பெரிய கூட்டங்களை நடத்துவதை தவிர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது ஸ்ரீநகர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 476 வழக்குகள் செயலில் உள்ளன. மேலும் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,438 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.