தமிழகம் முதல் ஜார்கண்ட் வரை பள்ளி திறப்பு மாற்றங்கள் – பருவநிலை மாற்ற எதிரொலி!
நாடு முழுவதும் நடப்பு ஆண்டில் பருவநிலை மாற்றங்கள் வித்தியாசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பள்ளிகள் திறப்பு பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் நடப்பாண்டில் தட்பவெப்ப நிலைகள் அனைத்தும் அதிகபட்ச ஏற்ற இறக்கங்களை கொண்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட பணிகள் அனைத்தும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்தந்த மாநிலங்கள் அங்கு நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பள்ளிகள் திறப்பை மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பானது கோடை விடுமுறைக்கு பின்பாகவும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம்:
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வார காலத்திற்கு உள்ளாகவே கனமழை காரணமாக பரவலாக சில மாவட்டங்களில் ஜூன் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம்:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் தற்போது நிலவிவரும் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக பள்ளிகள் ஜூன் 26 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஒரே புத்தகம் மட்டும் இனி போதும்!
மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஜூன் 20ஆம் தேதி முதல் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்றும 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜூன் 16ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் வெப்ப சலனம் காரணமாக மாணவர்களுக்கு பள்ளி ஜூன் 26 ஆம் தேதி திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதேபோல் ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.