தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா பரவல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அத்துடன் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. ஆனால் தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு 4,862 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த அறிவிப்பின் படி, தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதனை வருகிற 9ம் தேதி முதல் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 10 முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை!

இது தொடர்பாக ராமதாஸ் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் வணிக வளாகங்களையும், பெரிய கடைகளையும் மூட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். அத்துடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும் அத்துடன் கொரோனா வழிகாட்டுதல் வழிமுறையை பின்பற்றாத மதுக்கடைகள் திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!