தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் தொடர்ந்து அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீட்டு முகவர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அஞ்சல் துறையில் வேலை:
நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் அஞ்சல் நிலையங்களில் பல்வேறு சிறந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அஞ்சல் துறைகளில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை கிராமப்புற மக்களிடையே எளிய முறையில் கொண்டு சேர்க்கும் வகையில் தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதாவது கிராமிய அஞ்சல் காப்பீட்டு முகவர் மற்றும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடைபெற்று வருகிறது.
Reliance Jio பயனர்களுக்கு புத்தாண்டு சிறப்பு சலுகை – 562 ரூபாய் மிச்சமாகும்!
இந்த பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 50 வயதிற்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணிக்கு நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பாலிசி பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கு ரூ.5000 காப்பீட்டு தொகையை தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அந்தந்த அஞ்சல் நிலையங்களில் செலுத்த வேண்டும்.
அஞ்சல் துறை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – தேர்வுகள் ஒத்திவைப்பு!
இறுதியில் காப்பீட்டு தொகை வட்டியுடன் கிடைக்கும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அஞ்சல் நிலையங்களில் இதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வரும் ஜன.27ம் தேதிக்குள் கீழ் வரும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு அனுப்ப வேண்டிய முகவரி முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி 628501. இது குறித்த கூடுதல் விபரங்கள் அறிய 04632- 220368, 04636- 222313, 04633- 222329 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.