தமிழகத்தில் 10ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை!
தமிழகத்தில் வரும் ஜனவரி 10ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
தமிழகம் முழுவதும் அக்டோபர் , நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் இரவு பகல் பார்க்காமல் அதிக அளவில் மழை கொட்டி தீர்த்தது. இந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மார்கழி மாதம் என்பதால் கடும் பனி பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் ஜனவரி 6, 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை, தீவிரமடையும் ஊரடங்கு – மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
இந்த வகையில் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இலங்கையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 9-ஆம் தேதி தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை மற்றும் மிதமான மழை பெய்யும். இதனை தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
மாநிலத்தில் தற்போது ஊரடங்கு தேவையில்லை – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் வரும் 10ம் தேதி அன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 7-ஆம் தேதி அன்று காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் எனத் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.