பள்ளிகளுக்கு டிச.23 முதல் டிச.30 வரை விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் சங்கராந்தி பண்டிகையொட்டி குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.
பள்ளி விடுமுறை
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலைப்பரவல் ஓய்ந்து வந்ததையடுத்து மாநிலங்கள் தோறும் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்திலும் கடந்த ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு வகுப்புகளுக்குமான பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டது. அதன் படி தற்போது 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டு வருகிறது.
மதுபான விலை 20% குறைப்பு – மாநில அரசு அதிரடி அறிவிப்பு! மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!
இதற்கிடையில் வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஆந்திர பிரதேசத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டும் அரசு சில விடுமுறைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் கிறிஸ்துமஸ் மற்றும் சங்கராந்தி பண்டிகையை தொடர்ந்து கிட்டத்தட்ட 17 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை கடந்த டிச.18ம் தேதியன்று உத்தரவு பிறப்பித்தது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு 2022 – மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!
இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில், அனைத்து கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளுக்கும் டிசம்பர் 23 முதல் 30ம் வரையும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது. இப்பள்ளிகளுக்கு டிசம்பர் 31 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். தொடர்ந்து சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 முதல் 15 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. பின்னர் ஜனவரி 17ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். இதற்கிடையில் அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.