தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு 2022 – மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு 2022 - மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு 2022 - மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு 2022 – மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

தமிழகத்தில் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் ஆவின் நெய் உட்பட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு:

தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான தை முதல் நாளில் தமிழர்கள் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாட்டப்படும். தமிழர்களின் கலாச்சாரத்தை கடைபிடிக்கும் வகையிலும் வேளாண் செய்யும் செய்யும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் மாநிலம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை முன்னிட்டு தமிழக ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம், இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – மத்திய அரசின் செயலி! பதிவிறக்கம் செய்வது எப்படி?

கடந்த அதிமுக ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் பரிசுத்தொகையும், பொங்கல் பரிசுத்தொகுப்பும் வழங்கப்ட்டது. அதே போல 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, ஆவின் நெய் போன்ற பொங்கல் வைக்க தேவையான பொருட்களும் அது போக மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு புளி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை கோதுமை மாவு உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களும் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிச.25 முதல் 9 நாட்கள் விடுமுறை? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப்பணம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போதைய அறிவிப்பில் பணம் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை. மேலும் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் பொங்கல் பரிசுத்தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் 2022 ஜனவரி 3ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பரிசுப் பொருட்களை மக்களுக்கு நியாயமான முறையில் வழங்கிடவும் இத்திட்டத்தை ஒருங்கிணைத்து சிறப்பிக்க செயல்படுத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!