தமிழகத்தில் பள்ளிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை? அமைச்சரின் அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை? அமைச்சரின் அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை? அமைச்சரின் அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளில் விடுமுறை? அமைச்சரின் அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த ஜூன் 13ம் தேதி அன்று 2022-2023ம் ஆண்டிற்கான கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது இந்த கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனால் மாணவர்கள் மிகவும் குஷியில் உள்ளார்கள்.

மாணவர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் காரணமாக கடந்த கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கம் போல பள்ளிகள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் காரணமாக ஜனவரி மாதம் முழுவதும் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுத்தேர்வுக்கான பாடங்கள் முழு வீச்சில் நடைபெற்றது. மேலும் பொதுத்தேர்வுக்கான நாட்கள் நெருங்கிய நிலையில் பாடங்கள் நடத்தி முடிக்கப்படாமல் இருந்தது.

Exams Daily Mobile App Download

அதனால் பொதுத்தேர்வுக்குரிய பாடங்களை நடத்தி முடிப்பதற்கு வாரத்தில் 6 நாட்கள் வரை வகுப்புகள் நடத்தப்பட்டது. அதாவது, ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வகுப்புகள் நடைபெற்றது. இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனச்சுமையை ஏற்படுத்தியது. அதனால் இந்த கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

இந்த ஆலோசனையின் முடிவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-2023ம் கல்வியாண்டு ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது முதற்கட்டமாக 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். மேலும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!