மீண்டும் பள்ளி & கல்லூரிகள் மூடல், நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைப்பு – அரசின் அதிரடி உத்தரவு!
சீனாவின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் ஷாங்காய் நகரில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் கல்லூரிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான நுழைவுத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் பள்ளி கல்லூரிகள் மூடல்:
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலக நாடுகளுக்கும் பரவியது. உலக நாடுகள் கொரோனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறிய நிலையில், தீவிர ஊரடங்கு விதிகளால் சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது சீனாவில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் வேகமெடுத்துள்ளது. சீனாவின் துறைமுக நகரான ஷாங்காயில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Post Office இல் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!
இதனைத்தொடர்ந்து அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஷாங்காயின் தினசரி பாதிப்பு அதிகமாகி, வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள 2 கோடியே 60 லட்சம் மக்கள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளால், பீஜிங்கை அடுத்து சீனாவின் முக்கிய வர்த்தக நகரான ஷாங்காயில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கொரோனா மீள் எழுச்சி காரணமாக, ஷாங்காய் நகராட்சி அரசாங்கம் , நகரத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. மேலும் ஜூலை 7 முதல் 9 வரை நடைபெறும் கல்லூரி நுழைவுத் தேர்வில் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ள இருந்தனர். மேலும் ஜூலை 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற உள்ள மூத்த உயர்நிலைப் பள்ளி நுழைவுத் தேர்வில் 10,000 மாணவர்களுக்கு கலந்துகொள்வார்கள், அதே நேரத்தில் இயற்பியல் மற்றும் வேதியியல் மற்றும் வெளிநாட்டு மொழிக்கான ஆய்வகத் தேர்வுகள் நடைபெறும்.
மேலும் மாணவர்களுக்காக சிறப்பு அறைகள் அமைக்கப்படும் என்று ஷாங்காய் துணை மேயர் சென் குன் கூறினார். மார்ச் 12 முதல், ஷாங்காயில் உள்ள அனைத்து ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் மழலையர் பள்ளிகள் மற்றும் நர்சரிகள் மூடப்பட்டுவிட்டன. மேலும் சீனாவில் வெள்ளிக்கிழமை அன்று 345 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது, இந்த 345 பேரில் 253 பேர் ஷாங்காய் நகர் மக்கள் என்று தேசிய சுகாதார ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.