ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம்? கூட்டுறவு துறை அறிவிப்பு!

0
ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம்? கூட்டுறவு துறை அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம்? கூட்டுறவு துறை அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம்? கூட்டுறவு துறை அறிவிப்பு!

ரேஷன் கடைகளில் புதுமையான திட்டத்தை தொடங்க உள்ளதாக கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் ஏழை,எளிய மக்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விவரங்களை குறித்து இப்பதிவில் காண்போம்.

புதிய திட்டம்:

தமிழக அரசு ரேஷன் கடைகளில் மக்கள் பயன்பெறும் வகையில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். சமீபத்தில் ரேஷன் கடைகளில் வை பை இணைப்பு அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மக்கள் ரேஷன் கடைகளில் இலவச இணையதள சேவையை பெற முடியும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – மத்திய அரசின் புதிய உத்தரவு!

அந்த வகையில் ரேஷன் கடைகளில் 5 கிலோ சிலிண்டர் விற்பனையை தொடங்க உள்ளதாக கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பொது நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் வீடு தேவைக்கு 14.20 கிலோ எடையிலும்,வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இரண்டு வகையான தேவைகளுக்கும் இணைப்பு பெற கேஸ் ஏஜென்சியில் ஆதார் எண்,முகவரி சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். சிலிண்டர் வேண்டி பதிவு செய்தவுடன் டெலிவரி செய்யப்படும். வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்கள்,கல்லூரியில் படிப்போர் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.

Exams Daily Mobile App Download

அவர்களின் வசதிக்காக முக்கிய இடங்களில் உள்ள ஏஜென்சிகளில் 5 கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர்கள் விற்கப்படுகிறது. இதற்கு முகவரி சான்று தேவையில்லை என்றும் ஏதேனும் ஒரு அடையாள சான்று வழங்கினால் போதும் என்றும் சிலிண்டர் வாங்கும் போது மட்டும் டெபாசிட் பணம் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. பலருக்கும் இந்த சிலிண்டர் எப்படி பெறுவது என்ற விவரம் தெரியவில்லை. இதனால் அனைவருக்கும் தெரியும் வகையில் இந்தியன் ஆயில் உடன் இணைந்து ரேஷன் கடைகளில் சிலிண்டரை விற்க கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.முதற்கட்டமாக சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள நகர கூட்டுறவு சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் பண்டகசாலை நடத்தும் ரேஷன் கடைகளில் விற்பனையை தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தொடங்கப்படும். இது தொடர்பாக கூட்டுறவு துறையின் பொது விநியோக திட்ட இணை பதிவாளர் தேன்மொழி கூட்டுறவு சங்கங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் சாமானிய மக்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!